காம கலைக்கொண்ட குற்றத்தில், ஆலம் தரித்த வித்துவில், சித்திர திரிபுர கூத்தால், முப்பாவத்தினை அழித்து, (குற்றாலம்) நல்வித்து, வீரிய திருநெல் வித்தாகி, செப்பு முனி கூத்தில், வேலி கொண்ட நடுவணில் மேலோங்கி, (திருநெல்வேலி) ஆலம் நின்ற காட்டில், மனமானது ரத்தின சுருக்கமாகி, திருவோடோடு யாசக ஊர்ந்த கூத்தில், (திருவாலங்காடு) சுழுமுனை அம்பலத்தில், நின்ற இரஜித பிறை சந்தி கூத்தில், தன்னை கண்டுணர்ந்து ஞான சுந்திரனாகி, ஆட்சி வழி அகவிழியாகி, (மதுரை) வெற்றிட அம்பரத்தில் ஆனந்த கூத்தில் பொன் தில்லை சிவ கூத்தனை கண்டுணர்ந்தேனே. (சிதம்பரம்). "Shiva Guru Vasi yogam" Dr.V.Suresh