Skip to main content

Posts

Showing posts from August, 2018
தீமைகளைப் “பஸ்பமாக்கிவிட்டு” உயிராத்மாவைப் “புடம் போட்டு” நாம் ஒளியாக மாற வேண்டும் வைத்தியர்கள் தங்கத்தைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். இரும்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். செம்பைப் பஸ்பமாக்கிக் கொடுக்கின்றார்கள். பல சரக்கை அதனுடன் சேர்த்து அதனின் வீரிய உணர்வை மாற்றிவிட்டுப் பவுடராக்கி விடுகின்றார்கள். அதனின் சத்து கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிலிருக்கின்ற கடினமான நிலைகளைப் பஸ்பமாக்குகின்றார்கள். 1.அதனுடைய சத்தை எடுத்துச் சாப்பிடச் சொல்லும் போது அது தண்ணீராகக் கரைந்து 2.நம் உடலில் இருக்கக்கூடிய கெட்டதை இது பஸ்பம் செய்து 3.நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. 4.நம் உடலில் இருக்கக்கூடிய வியாதிகளைப் போக்குகின்றது. 5.வைத்திய முறையில் இவ்வாறு செய்கின்றோம். ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போல வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் தான். தன் வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கெட்டதையெல்லாம் பஸ்பம் செய்து விடுகின்றார்கள். தனக்குள் வந்த நோயை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை தனக்குள் வளர்த்து இந்த உடலில் இருக்கக்கூடி...
“ஈஸ்வரா……!” என்று இரண்டு இமைகளுக்கு மத்தியில் (இமயமலையில்) “புருவ மத்தியில் அமர்ந்து செய்ய வேண்டிய தவம்” தியானமிருக்கும் (உலகெங்கிலும்) அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மலரைப் போல மணம் பெற்று வாழ்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா…..!” மகரிஷிகளின் அருள் ஒளி உலகம் முழுவதும் படர்ந்து உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வழி பெற்று அவர்களை அறியாத இருள் நீங்கி… பொருள் காணும் அருள் சக்தி பெற்று அவர்களது குடும்பங்கள் சகோதர உணர்வுடன் வளர்ந்து வாழ்ந்திடவும் அருள் ஞானம் பெற்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா……!” மகரிஷிகளின் அருள் ஒளி உலகம் முழுவதும் படர்ந்து உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று சகோதர உணர்வுடன் மத பேதமின்றி.. இன பேதமின்றி… மொழி பேதமின்றி… மன பேதமின்றி.. அரசியல் பேதமின்றி… வாழ்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா…..!” மகரிஷிகளின் அருள் ஒளி தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களை அறியாத இருள்கள் நீங்கி மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் பெற்று உலகம் வாழ்ந்தி...
பீஜமந்திரம்.................................................................................. பீஜ மந்திரங்களை உட்சரிப்பதனால் பயன் என்ன?? என்பதை விளக்குவதே இப்பதிவு. நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் "ம்" தான் "ங்" ஆக மாறுகின்றது. அதாவது "ஓம்"காரம் என்பது "ஓங்"காரமாகவும், "ரீம்"காரம் என்பது "ரீங்"காரமாகவும் மாறுகின்றது. "காரம்" என்பது வரிசை என பொருள் கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரையில் முதலில் பேச பழகும்போது "ங்" சேர்ந்த வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. அதாவது அங்கு, வங்கு, வங், யங் போன்ற பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இதற்குபின் தான் "ம்" சேர்ந்த பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. அதாவது அம்மா, ஓம், ஆமா போன்ற வார்த்தைகளை உச்சரிக்கின்றன. மேலும் "ங்" சேர்ந்த பீஜங்களை உச்சரிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இமையை அதிகமாக அசைக்காது கூர்ந்து எதையும் கவனிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும். அடுத்ததாக "ம...
www.supremeholisticinstitute.com திருமந்திரம் ::  தியானம் -------------------------------------------- கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப் பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. கண் நாக்கு மூக்கு செவி ஆகிய ஞானக் கருவிகள் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தும் பழமையான பொருள் ஒன்றுண்டு; உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று மேலே இருக்கும் இடத்தில் ஒளி வடிவில் இருக்கிறது. இதை தரிசித்தல் குண்டலினி சக்தி எழும்பி நம்மை மேம்படுத்தும் ... ------------------------------------------------------------------------------- ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே. பரவெளியை மூன்றாம் கண் கொண்டு உற்று பார்த்து இருக்க பிராண ஆறு உள்ளிருந்து வழிந்து ஓடுவது கண்டு நிற்கலாம்!! --------------------------------------------------------------------------- ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை ஒருபொழு துன்னார் உயிருட் ...